யாருங்க, கோவை மாவட்ட கலெக்டர் தானே பேசுறீங்க ஆமாங்க,
நான்தான் சி.எம் பேசுறேன், இன்னைக்கு தீக்கதிர் படிச்சீங்களா வணக்கங்க, படிக்கலைங்க உடனே தீக்கதிர் வாங்கி படிங்க,
முதல் பக்கத்துல ஒரு செய்தி வந்திருக்கு, கோவை மாநகர் வரதராஜபுரம் - பெரியார் நகரில் ஒரு தீண்டாமைச் சுவர் இருக்காம். உடனே ஆய்வு செய்து அதைச் சட்டத்திற்கு புறம் பான சுவர் என்றால் அப்புறப்படுத்த நட வடிக்கை எடுங்க. சரிங்க, உடனடியாக நடவடிக்கை எடுக்குறேன்.
இது அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த உமாநாத் அவர்களுக்கும் அதிகாலையில் நடந்த உரையாடல். ஆம்! கோவை வரதராஜபுரம், பெரியார் நகரில் தலித் அருந்ததியர் மக்கள் குடியிருந்த பகுதியில் அவர்கள் பிரதான சாலையை எளிதில் அடையும் ஒரு பாதையை மறித்து சாதிய சக்தி களின் தூண்டுதலால் ஒரு சுவர் எழுப்பப் பட்டிருந்தது. உத்தபுரம் தீண்டாமைச் சுவர் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த பல தீண்டாமைச் சுவர்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அதில், வரதராஜபுரம் பெரியார் நகர் தீண்டாமைச் சுவரும் ஒன்று.
இந்தச் சுவரை அப்புறப்படுத்தி அப்பகுதி யில் குடியிருந்து வரும் அருந்ததிய மக்கள் பிரதான பொதுச் சாலையை எளிதில் அடைய வழிவகுக்க வேண்டுமென சிபிஐ(எம்) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கோவை மாநகர ஆணையாளர், துணை ஆணையாளர் போன்ற அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக் கப்பட்டிருந்தன. இது குறித்த செய்தியும் தீக்கதிரின் முதல் பக்கத்தில் பிரசுரமாகி யிருந்தது. அதனைப் படித்த தமிழக முதல்வர் மேற்கண்ட உரையாடலை கோவை மாவட்ட ஆட்சியருடன் நடத்தி உள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக சுவர் கட்டப்பட்டிருந்த இடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் அது சட்டவிரோதமான சுவர்தான் என்றும் அருந்ததியர் மக்கள் வாழும் இடத் தில் அரசுக்கு சொந்தமான பொது இடத் தில் கட்டப்பட்டுள்ளதாகவும் உண்மை வெளிவந்தது. உடனடியாக அச்சுவரை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். இதன்படி பொக்லைன் இயந்திரத் தின் மூலம் அந்தச் சுவர் இடித்து அப்புறப் படுத்தப்பட்டது. இந்நிகழ்வு அப்பகுதி அருந் ததியர் மக்களுக்கு ஏற்படுத்திய மகிழ்ச்சிக் கும் ஆரவாரத்திற்கும் எல்லையே இல்லை.
இந்தச் சுவர் தகர்க்கப்படும் காட்சியை பார்த்த தண்டபாணி என்ற கோவில் பூசாரி ஒருவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கூறியதாவது, “என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். ஆம். எனக்கு சுய நினைவெல்லாம் இருக்கிறது. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். எனக்கு வந்த அழுகையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். ஆமாம். சந்தோ ஷத்தில் கூட அழுகை வரும் என்று அன்று தான் எனக்கு தெரியும். பொக்லைன் எந்திரத் தின் ராட்சத பற்கள் சுவரை நோக்கி போனப்போ என்னுடைய உடம்பு கரண்ட் பாய்ஞ்சாப்ல இருந்துச்சு தெரியுங்களா” என பக்கத்தில் உள்ளவர்களிடம் மாய்ந்து மாய்ந்து வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார். தெருவுக்குள் புதிதாக யார் வந்தாலும் வாங்க வாங்க என்று அன் பொழுக விசாரித்து உபசரித்து டீ வாங்கித் தர ஆயத்தமாகிறார்கள் அப்பகுதி இளைஞர்கள் - வந்தவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையில்.
“அருந்ததியர் உள் ஒதுக்கீடு கிடைத் ததில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்கு இருக்கு, அதற்காக கோவை யில் பாராட்டு விழா நடந்தபோதுதான் நான் இப்படி ஒரு தீண்டாமைச் சுவர் இருப்பதை மேடையில் பேசும்போது குறிப்பிட்டேன். சொன்ன உடனே சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் பதறிப் போய் தலையிட்டார்கள்” என்றார் ஆதி தமிழர் விடுதலை முன்னணியின் அமைப்பா ளர் கோவை ரவிக்குமார்.
கோவை பெரியார் நகர் தீண்டாமைச் சுவர் 2010 ஜனவரி 30இல் இடித்து அப்புறப்படுத் தப்பட்டது. சுவர் அப்புறப்படுத்தப்பட்ட பின் னரும், 30 அடி பாதையின் ஒரு பகுதியை பிள்ளையார் சிலை வழிமறித்து இருந்தது. அங்கிருக்கும் பிள்ளையாரை வேறு இடத் திற்கு மாற்றி வைக்க அப்பகுதியில் உள்ள மக்களுடன் பேசி அவ்வாறே முடிவும் ஆனது. அந்த மக்களிடம் இந்து முன்னணி யின் தில்லுமுல்லுகள் எடுபடவில்லை. உரிய சடங்குகளுடன் பிள்ளையார் அருந்ததியர் குடியிருப்புப் பகுதியின் ஒரு மையமான இடத்தில் அமர்த்தப்பட்டார். அருந்ததியர் மக்களின் பயன்பாட்டிற்கு ஒரு வழியாக முழு பாதையும் கிடைத்தது. மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்திருந்த அம்மக்களிடம் இதைப் பற்றி கூறிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் “வழிமறிச்சான் பிள்ளையாராக இருந்தவர் இனி வழிவிட்டான் பிள்ளை யாராக வழிபடப்படுவார்” என கூறிய போது கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியையும் ஒப்புதலையும் வெளிப் படுத்தினர்.
“முழங்காலுக்கு மேலே தண்ணி வந்தி ருக்கும். சுவருக்கு இங்கிட்டு பள்ளமா இருந் துச்சுல்ல. எனக்கு தெரிந்து வாலிபப் பசங்க சுவரை எடுக்க அலையா அலைஞ்சுதுங்க, அதுஅதுக்கு நேரம் வரனும் இல்லையா, அக்கிரமம் ரொம்ப நாள் நீடிக்காது, இப்போ கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களால நியாயம் கிடைச்சுருக்கு, ஆளும்பேருமா வந்திருக் கீங்க, சாப்பிட்டு போங்க தங்கங்களா” என்று உபசரித்தார் அருந்ததிய மூதாட்டி ஒருவர்.
பெரியார் நகர் தீண்டாமைச் சுவர் இடிக் கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட பிறகு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் என்.வரத ராஜன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத், மாவட்ட அமைப்பா ளர் யு.கே.சிவஞானம், ஆதி தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட தலைவர்களை 10.02.2010இல் வரத ராஜபுரம் பெரியார் நகர் மக்கள் ஆரவாரத் தோடு வரவேற்றதோடு பாராட்டு நிகழ்ச்சி யும் நடத்தினர்.
இதோ, மற்றொரு தீண்டாமைச் சுவர் தகர்ப்பு சம்பவம். கோவையையொட்டி வேடப்பட்டி என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்டு நாகராஜபுரம் என்ற தலித் அருந்ததியர் மற்றும் நரிக்குறவர் குடி யிருப்பு பகுதி உள்ளது. இங்கு 400 அருந்ததியர் குடும்பங்களும், 100 நரிக்குற வர் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். நாகராஜபுரம் பகுதியையொட்டி தனியார் வீட்டுமனைக்கான நிலங்கள் வீரகேரளம் பேரூராட்சிக்குட்பட்டு உள்ளது. இதற்கு 2003 ஆம் ஆண்டு ோவை